Thursday, July 1, 2010
விடைகளைத்தேடி!!!
கவலை இன்றி சுற்றி திரியும் சிட்டுக் குருவியை பாருங்கள்.. அக்காவுக்கு கல்வி.. ஆயாவுக்கு திருமணம்.. போன்ற எந்த கவலையும் இல்லாத இந்த சிட்டு குருவியே சிறுக சிறுக சேகரிக்கும் பொது நீங்கள் ஏன் TNSC பேங்க் இல் கொள்ளை அடிக்க கூடாது .. என்ற ஒரு நகைச்சுவை விளம்பரம் எங்கோ கேட்ட ஞாபகம் வந்தது...
அதை கேட்கும் போது அதில் நகைச்சுவை ஒளிந்திருந்தாலும் உண்மை புதைந்து இருப்பது பலருக்கு புரியாது.. எந்த ஒரு உயிரனமாக இருந்தாலும் தங்களுக்கென்ற உலகத்தில் தங்களுக்கென்ற கடமையை செய்து கொண்டு தான் உள்ளது. எறும்பை எடுத்து கொள்ளுங்கள்.. எதற்கு தான் இவ்வளவு சுறுசுறுப்பு என்று தோன்றும்.. ஆனால் மழை பெய்யும் காலத்தில் அது கால் மேல் கால் போட்டு அமர்ந்து சேகரித்த உணவை உண்ணும். அதற்கும் சோகம், சந்தோசம், விருப்பு, வெறுப்பு என்ற பல வித எண்ணங்கள் இருக்குமா?? இருக்கலாம்.. இது போன்ற ஐந்தறிவு படைத்த ஜீவராசிகள் இப்படி வாழ்வை போட்டி போட்டு கொண்டு வாழும் போது ஆறறிவு கொண்ட அற்பர்கள் வாழ்வை எப்படி வாழ வேண்டும். தவறு செய்யாத ஒருவரும் இந்த உலகத்தில் இருக்க முடியாது. தவற்றை மன்னிப்பது.. மறப்பது.. அதை மறந்து அடுத்த நிலையை எப்படி எட்டுவது போன்ற விஷயங்கள் பிறப்பில் இருந்து வருவதில்லை. ஒவ்வொரு மனிதனும் கடந்து வந்த பாதை.. அதிலிருந்த முட்களையும் கற்களையும் பொறுத்தது. சிலர் தாங்கள் செய்த தவறிலிரிந்து பாடம் படிப்பார்கள். சிலர் தங்களுக்கு இளைக்கைபெற்ற தவறிலிருந்து பாடம் படிப்பார்கள். ஆக அனைவருக்கும் பாடம் என்பது எதோ ஒரு வகையில் புகட்ட படுகிறது. ஒருவருக்கு தவறாக படுவது மற்றொருவரை பொறுத்தவரையில் அப்படி தோன்ற அவசியம் இல்லை. இதுபோன்ற நேரங்களில் பழி வாங்கும் உணர்சிகளும் கோப கொந்தளிப்புகளும் தலை விரித்து ஆடும். தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு பழி வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் அது கை விட படவேண்டும். அனால் அறிவுக்கு எட்டுவது ஆத்திரத்துக்கு எட்டுவதில்லை. உனக்கு இழைக்கப்பட்டது அநியாய கொடுமை தான். ஆனால் இப்படி பாதிக்கபட்டவன் எல்லாம் பழி வாங்க துடித்தால் இந்த உலகத்தில் யாரும் மிஞ்ச போவதில்லை. நம்பிக்கை துரோகம், என்பது ஏற்க முடியாத ஒன்று தான். என்ன செய்வது நடக்க வேண்டும் என்று இருந்தால் அது நடக்கும். உனக்குள் அழுது புலம்பு. தெளிவடைய தேவையானவற்றை செய். ஆம் தடங்கல் நிறைய உண்டு. இதை மீண்டு வர முடியாதவன் எல்லாம் கெட்டவன் அல்ல. பாதிக்கபட்டவன் நிலையிலிரிந்து பார்த்தால் பரிதாபம் தான். காதல் தோல்வி என்பது மனிதனுக்கு தவிர்க்க முடியாத ஒன்றாக அமைவதுண்டு. அதன் கூடவே நம்பிக்கை துரோகமும் கலந்து வரும் போது அந்த பாவப்பட்ட மனிதன் என்ன செய்வதென்று அறியாமல் தவித்து தவித்து வேதனை கொண்டு மனம் உழன்று தெளிவு பெற வேண்டும். ஆயிரம் கேள்விகள் உதிக்கும். அப்பொழுது இந்த அநீதியை இளைத்தவர்கள் எப்படி தண்டனை இல்லாமல் தப்பிக்கலாம்? போன்ற மனக்குமுறல்கள் தோன்றும். இதை செய்தவர்கள் அவ்வளவு கல் நெஞ்சம் கொண்டு திரியும் போது ஏன் சக மனிதன் ஆகிய நான் அடங்கி போகவேண்டும் என்று தோன்றும். அவர்களுக்கு என்ன தான் முடிவு?? இந்த பாடங்கள் எல்லாம் எங்கு கற்று தர படுகிறது?? பட்டால் தான் புத்தி வரும் என்று பட்டவர்கள் கூறி உள்ளனர். இந்த கேள்விகளுக்கு எல்லாம் விடை எங்கே இருக்கிறது. மிகவும் சொற்பமான ஒரு பதில் உண்டு.. ஆனால் அதுதான் நிலையானது. காலம் தான் பதில் சொல்ல வேண்டும். பொறுமை கடலிற் பெரிது.
இந்த கலியுகத்தில் எப்படி அவர்களுக்கு நடக்கும் என்ற கேள்வி ஒருபுறம் எழுந்து கொண்டே இருக்கும். சிலர் தாங்களே பழி தீர்க்க வேண்டும் என்று செயல்களை கையில் எடுப்பார்கள். சிலர் நடப்பது நடக்கட்டும் என்று பொருத்து இருப்பார்கள். தவற்றை இளைத்தவர்கள் அதை கொஞ்சம் கூட உணராமல்.. அவர்கள் வழக்கை தான் முக்கியம் என்று முன்னெடுத்து செல்லும்போது.. பாதிக்கப்பட்டவர்கள் எப்படி தோல்வி அடைந்தாலும் பரவாயில்லை என்று அமைதி கொள்வது. ஏன் மனிதனுக்கு இது போன்ற எண்ணங்களையும் அமைதியின்மையையும் தர வேண்டும். என்ன மாதிரியான படைப்பு இது? "what Kind of a design is this"??
விடைகளைத்தேடி !!!!
Subscribe to:
Post Comments (Atom)
//இது போன்ற ஐந்தறிவு படைத்த ஜீவராசிகள் இப்படி வாழ்வை போட்டி போட்டு கொண்டு வாழும் போது ஆறறிவு கொண்ட அற்பர்கள் வாழ்வை எப்படி வாழ வேண்டும்.//
ReplyDeleteக.. க.. க.... போ....